Monday, January 31, 2011

டி -ஷர்ட்


டி -ஷர்ட்
[ T SHIRT ]
நகர்புற வாழ்க்கையில் சில ரசிக்கத்தக்க சம்பவங்கள் ……
எங்கள் பக்கத்து வீட்டுப் பையன் ஒரு நாள் '' ஹலோ, அங்கிள் '' என்றான் .... நாங்கள் வீட்டை விட்டு வெளியே போகும்போது ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும், சில வார்த்தைகள் பகிர்ந்துகொள்வதும்  இந்த அடுக்கு மாடி வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் சில பரிமாற்றங்கள்.
பிளஸ்-டூ  துருதுருப்பு.
நல்ல சூட்டிகையான பையன்.
நானும் '' ஹலோ friend,  how are you ''  என்றேன் பதிலுக்கு.
கூடவே  '' உன் டி -ஷர்ட் பிரமாதம்'' என்றேன்.
அதில் இருந்த வாசகம் என்னை ஈர்த்தது:
'' I AM THE PROUD PRODUCT OF 
   MY DEAR FATHER'S BRAIN AND
   MY  LOVING MOTHER'S  BANK BALANCE!''
என்பதுதான் அதன் வாசகம்!
தமிழாக்கம்:
''என்னை உருவாக்கியது
 
என் அருமை அப்பாவின் மூளையும்
 
என் அன்பான அம்மாவின் பண பலமும்.''
நான் சிரித்தேன், கூடவே வியந்தேன். எவ்வளவு நல்ல அஸ்திவாரம்
பரவாயில்லை பையனுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் .அப்போது அவன் சொன்னான்,
''அங்கிள், இந்த டி -ஷர்ட் என்னை ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்து காப்பாற்றியது போன வாரம்.''
''
அப்படி என்னப்பா இக்கட்டு  உனக்கு, இந்த இளம் வயதில்... அதுவும் உன் அருமை அப்பாவும், அன்பான அம்மாவும் உனக்கு துணை இருக்கும் போது என்ன இக்கட்டு வந்தாலும் பறந்து போகாதோ?''
''
போன வாரம் கணக்குப் பரிட்சையில் எனக்கு ஜீரோ மார்க்.
அன்னிக்கு என் டீச்சர் என்னை கூப்பிட்ட போது பயந்துகொண்டே போனேன், என்ன சொல்லி தப்பிக்கலாம் என்ற எண்ணத்தில்.... ' உடம்பு சரியில்லை, அதனால் பரீட்சைக்குச் சரியாகப் படிக்க முடியவில்லை' என்று முதலிலேயே பலதடவை சொல்லியாச்சு.
எடுபடாது.
திடீர் என்று ஒரு மின்னல் மூளையில் ....
'
மிஸ், இதுக்கு நான் காரணமில்லை ... இது தான் காரணம் 'என்று இந்த டி -ஷர்ட் வாசகத்தை காட்டினேன்அன்றைக்கு அதிர்ஷ்ட வசமாக இந்த டி -ஷர்ட் அணிந்திருந்ததால்.
' I AM THE PROUD PRODUCT OF
MY DEAR FATHER'S BRAIN
AND MY LOVING MOTHER'S BANK BALANCE'
என்று கூடவே படித்தேன், சிரிப்பை அடக்கிக்கொண்டு.
அவர் கேட்டார்,'' என்ன சம்பந்தம் இல்லாமல் ஜோக் அடிக்கிறாய்,டி -ஷர்ட் க்கும் கணக்கில் மார்க் வாங்குவதற்கும் என்ன சம்பந்தம்?' என்று.
நான் சொன்னேன்:
' எங்கப்பா எப்பவும் சொல்வார் ... எங்கம்மாவுடைய பேங்க் பாலன்ஸ், எங்கப்பாவுடைய மூளை  இரண்டும் ஜீரோ ' என்று.
டீச்சர் சிரித்து விட்டார், என்னை கோபிக்க வேண்டும் என்று தோன்றாமல்....
எப்படியோ தப்பித்தேன் அன்றைக்கு.''அவன் சொன்னதைக் கேட்டு எனக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
நானும் பலமாகச் சிரித்தேன். எவ்வளவு நகைச்சுவை உணர்வு உள்ள குடும்பம்!
''
இல்லாவிட்டால் என்ன பண்ணியிருப்பார்உங்கள் டீச்சர் ?''
''
ரொம்ப ஹோம் வொர்க்  கொடுத்திருப்பார் ''
''
அதனால் என்ன, செய்ய வேண்டியது தானே?''
''
மறுபடி ஜீரோ வாங்கினால், மறுபடி இதே T-SHIRT உதவாது வேறே ஏதாவது வழி பார்க்கணும்'' என்றான் என் பக்கத்து வீட்டு ஜீனியஸ்.
உண்மையாகவே ஜீனியஸ் தான் .... இது போல் தப்பிக்க ரொம்ப மூளை வேண்டும்.

ஒரு கழுதை கொடுத்த உதை


ஒரு கழுதை கொடுத்த உதை
லிபியா
1995
எண்ணை சுத்தீகரிப்பு  ஆலை
எனக்கு பொறியியல் வேலை
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பண்ணை (farm).வாரம் ஒருமுறை அங்கே போய் பால் வாங்கி வருவது என் வாடிக்கை.
அந்தப் பண்ணையின் உரிமையாளர் இப்ரஹீம்.
நல்ல தடிமனான வஞ்சனை இல்லாத உடல்.
சிரித்தால் வாய் முழுவதும் தங்கம் ஜொலிக்கும் பல் வரிசை.
உள்ளே நுழைந்ததும் ஓடிவந்து வரவேற்கும் கடைக்குட்டிப் பெண்.
புஸு புஸு என்று கிள்ளத் தோன்றும் கன்னங்கள்.
ஐந்து அல்லது ஆறு வயதுதான்.
ஓடி வந்து என்னிடமிருந்து பால் நிரப்பும் ஐந்து லிட்டர் பிளாஸ்டிக் கேனை பிடுங்கிக்கொண்டு என் கையிலிருந்து ஒரு சாக்லேட் துண்டையும் ஆவலுடன் பறித்துக்கொண்டு துள்ளி ஓடும் ஒய்யாரம் அந்த குழந்தைக்கே உரிய, என்னைக் கவர்ந்த வரப்ரசாதம்.
நான் காரைத் திருப்பிப் பார்க் செய்து விட்டு இறங்கிப் போவதற்குள் இப்ரஹீமின்  மற்றக் குழந்தைகள் என்னை மொய்த்துக்கொள்ளும்.
வரிசையாக ஒண்ணரை ஒண்ணரை வயது வித்தியாசத்தில் ஒரே அச்சில் வார்த்துச் சிரிக்கும் பொம்மைகள்.
ஒரு சாக்லேட்  போதும் அவை மலர.
இப்ரஹீம் பண்ணை நடுவிலிருந்து குரல் கொடுக்க நான் அவரை நோக்கி  நடக்க ஆரம்பித்தேன்.
அவரிடம் போய் கை குலுக்கி சம்பிரதாய வினவல்களை அராபிய மொழியில் எனக்குத் தெரிந்த அளவில் பரிமாறிக்கொண்டபின் அங்கே கட்டி இருந்த அவருடைய கழுதை என்னைப் பார்த்து அன்புடன் கனைத்ததில் ஒரு சந்தோஷம் ஏற்பட்டது....ஏதோ அருமை நண்பனை பார்த்த மாதிரி.
இப்ரஹீம் சொன்னார்:
''
இந்தக் கழுதை என் பிரியமான பிராணி.
என் மனைவியை விட என் கழுதை சில விஷயங்களில் மேன்மையானது''எனக்கு ரொம்ப வியப்பாகி விட்டது. இப்படியும் ஒரு மனிதனா?அதுவும் வீட்டில் மனைவி இருக்கும்போதே இப்படி உரத்தகுரலில் சொல்ல என்ன தைரியம்?
''
என்ன இப்ரஹீம் ... ஏன் இப்படி சொல்கிறாய்... உன் மனைவி ரொம்ப நல்ல மாதிரியாச்சே.''
''
அப்படித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள்.
ஆனால் நடப்பது வேறு.
நான் காலை ஐந்து மணியிலிருந்து பண்ணை வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன்....
பாருங்கள், நான் ஒரு நிமிடம் ஓய்வாக நின்றால் உடனே குரல் கொடுப்பாள் அடுத்த வேலை தர.
என் கழுதை அப்படி இல்லை.
நான் கட்டிய இடத்தில் அமைதியாக மேய்ந்து கொண்டு இருக்கும். நான் முதுகில் ஏற்றும் சுமையை சலிக்காது என்னுடன்  எடுத்து வரும்.
எனக்கு என் கழுதை தொந்திரவே தந்ததில்லை.
எவ்வளவு நல்ல பிராணி இது.
கடவுள் இந்தக் கழுதையை ரட்சிக்கட்டும்.''என்று கூற , நான் அந்த அதிசயக் கழுதையை நெருங்கிப் பார்க்க அடி எடுத்து வைத்தேன்.
உடனே அந்தக் கழுதை தன் உடலைத் திருப்பி அதன் பின்னங்கால்கள் என் பக்கம் வரும்படி நின்றது.
சரி நாம் வேறு பக்கம் பார்க்கலாம் என்று நான் அடியெடுத்து வைக்க அந்தக் கழுதையும் மறுபடி அதன் பின்கால்கள் என்னை வரவேற்கும் நிலையில் திரும்பி நின்றது.
நான் புரிந்து கொண்டேன்.
கழுதைகள் கூட புத்திசாலிகள் தான்.
மனிதனை நெருங்க விடாமல் உதைக்க அவற்றுக்கு இயற்கை கற்றுக்கொடுத்திருக்கிறது.
ரொம்பவும் நெருங்க முற்பட்டால் நம் முன்பற்களை இழக்க நேரிடும்.
இந்த defence mechanism ( தற்காப்புத் திறன் ) எல்லாக் கழுதைகளுக்கும் உண்டு.
அவைகளுக்கு தெரியும்....இந்த மனிதப் பிராணிகளை மதித்துப் பக்கத்தில் வர விட்டால் நம் மேல் ஏறி உட்கார்ந்து நம்மையே அதிகாரம் செய்வார்கள் என்று.
அந்தக் கழுதையின் உரிமையை மதித்து நான் சிறிது நகர்ந்தேன்.
கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தபோது ஒரு வேடிக்கையான விஷயம் தென்பட்டது . அந்தக் கழுதை கட்டியிருந்த கயிறு சுமார் இருபது  அல்லது  இருபத்து ஐந்து அடி நீளம் இருக்கும்.பக்கத்துப் பண்ணைக்குப் பரவாமல் மேயும் அளவுக்குக் கொடுக்கப் பட்ட நீளம்.
நாள் பூரா மேய்ந்தாலும் போதுமான புல்லும் செடிகளும் வளர்ந்திருந்த செழிப்பான பூமி .
அந்தக் கழுதைக்கு குறைபட ஏதுமில்லை.
ஆனால் நான் பார்த்த ஒரு விஷயம் என் மனதில் கேள்விக்குறியாய் தொடர்ந்தது.
அந்தக் கழுதை, கட்டியிருந்த கம்பத்தின் அருகாமையிலேயே மேய்ந்து கொண்டிருந்தது.
கொஞ்சம் பெரிய வட்டத்தில் நிறைய பசுமை  இருந்தும் சிறிய வட்டத்திலேயே அடங்கி இருந்தது....
ஏன் என்று பார்த்தால் அது கயிற்றை ஒரே முகமாகச் சுற்றிச்  சுற்றி அந்தக் கயிற்றின் நீளம் முழுவதும் அந்தக் கம்பத்தில் ஏறி, மிகக் குறுகிய அளவே எஞ்சி இருந்தது.
அந்தக் கழுதை கொஞ்சம் நிதானித்துப் பார்த்திருந்தால் அந்தக் குறுகிய வட்டத்திலிருந்து விடுபட்டு நல்ல பசுமையான புல்லை மேய வாய்ப்புக்  கிடைத்திருக்கும்.
ஆனால் குறுகிய வட்டத்திலேயே ஒரே பக்கமாக சுற்றி வந்து தன்னை வளைத்துப் போட்டுக்கொண்ட அறியாமையை உணரவில்லை.
உணர்ந்தால் அது மிக எளிதாய் மற்ற பக்கத்துக்கு திரும்பிச் சுற்றி வந்து தன்னை இந்தக் குறுகிய வட்டத்திலிருந்து விடுவித்துக் கொள்ளலாம்.
இதெல்லாம் அந்தக் கழுதைக்குத் தெரிய வேண்டும் என்று நான் நினைப்பதே ஒரு மடமை தான்.
அதற்கு அதுபோன்ற நிர்பந்தங்கள் இல்லை.
மனிதனைப் போல நினைக்க வேண்டிய மன உளைச்சலும் அதற்கில்லை.
திடீர் என்று எனக்கு ஒரு உதை!
உடலில் இல்லை
மனதில்.
'
நானும் அந்தக் கழுதை போல்தானே?' என்ற நினைப்புத்தான் அந்த உதை.
கடந்த கால அனுபவங்களினால் ஏற்படுத்திக்கொண்ட  மனத்தடைகள், என் சுற்றம், என் குடும்பம், என் கலாச்சாரம், என் தொழில் என்று என்னைச் சுற்றி வட்டங்களை நிறுவிக்கொண்டு அந்தக் குறுகிய இடத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் நான் இந்தக் கழுதையை விட என்ன உயர்த்தி?அந்தக் கழுதை அந்தக் கணத்தில் ஒரு நல்ல பாடம் கற்பித்தது.
இதுவரை அதை என்னால் மறக்க முடியவில்லை.
அந்தப் பரிமாணத்திலிருந்து என்னை மீட்க வந்ததுபோல் இப்ரஹீமின்  மனைவி பால் நிரப்பிய குடுவையுடன் வந்தாள்.
நாங்கள் கழுதையுடன் உரையாடிக்கொண்டிருந்த காட்சியைக் கண்டு சிரித்துக் கொண்டே சொன்னாள்:
''
இந்த மனிதனின் மடமையைப் பாருங்கள் ...
இந்தக் கழுதை இவருக்கு சோறு போடுமா?என்னை விட இந்தக் கழுதை எப்படி மேலாகும்?நான் தினமும் படைத்த உணவு எவ்வளவு சுவையானது என்று இப்ரஹீமின் உடலே சொல்லும்.''என்று கூறியபடி அவரது தொப்பையைத் தொட்டுக்காட்டி கேலி செய்தாள்.
இதற்கு ஒன்றும் சளைக்கவில்லை இப்ரஹீம்.
''
நீயும் எனக்கு நிகர் தான்'' என்று சிரித்தான்.
அவளுடைய சுற்றளவை இப்ரஹீம் எட்ட பல நாட்கள் ஆகும் என்பது நிதர்சமான உண்மை.
நான் சிரித்துக்கொண்டே பாலுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு காரில் ஏறினேன்.
அந்தக் கழுதை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் என்னுடன் ஐக்கியமாகி விட்டது.

தர்ம சங்கட நேரங்கள்.


தர்ம சங்கட நேரங்கள்.
என் நண்பன் ஒருவன் ஏதாவது சிரிப்பு வெடி தெளித்துக்கொண்டே இருப்பான்....எதையும் எளிதாக்கி மனச் சுமைகளை ஓட்டி விடும் நுட்பம் கைவந்தவன். 
பெயர்: சாலா ஆஸ்கர் .
இடம் : அசாவியா, லிபியா.
பருத்த உடலுடன் குண்டு முகத்தில் சிரிப்பை அடக்கி அவன் நிதானமாய் ஜோக் அடிக்கும்போது யாராலும் அவன் வலையில் விழாமல் இருக்க முடியாது.
சில விஷயங்களில் அவனுக்கு உடன்பாடில்லை என்றால் அதை நாசுக்காக அவன் சமாளிக்கும் விதமே தனி.
ஒரு  சமயம் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மற்றொரு நண்பன் சாலா விடம்
''
சாலா, உன் கார் சாவியைக் கொஞ்சம் கொடு. சில மணியில் திரும்பி வந்துவிடுவேன்.'' என்றான்.
சாலாவுக்கு காரைக் கொடுக்க விருப்பமில்லை என்பது அவன் முகத்திலிருந்து தெரிந்தது.
அவன் சொன்னான் :
''
என் அப்பாவைக் கேட்காமல் நான் காரை யாரிடமும் தருவதற்கில்லை. மன்னிக்க வேண்டும்.
உனக்கு அவசரமாய் drop செய்ய வேண்டும் என்றால் சொல். இன்னும் சில நிமிஷத்தில் நானே வருகிறேன் drop செய்ய.''அந்த நண்பன் '' பரவாயில்லை, வேண்டாம் . நான் வேறே வழி பார்த்துக்கொள்கிறேன் '' என்று நகர்ந்தான்.
சாலா வின் இந்த லாவகமான பதில் என்னைக் கவர்ந்தது.
''
சாலா, காரைக் கொடுக்க முடியாது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லாமல் அதை நீ சமாளித்த விதம் எனக்குப் பிடித்தது.
அதுவும் உன் தந்தை மேல் உனக்கு அவ்வளவு மரியாதை இருப்பது பெரிய விஷயம். அவர் சொல்லை அவ்வளவு நெறியோடு கடைப்பிடிக்கிறாயே?''சாலா: '' அப்படியே பழகிவிட்டது.''நான்: '' உன் அப்பா எங்கே வேலை செய்கிறார்? என்ன தொழில்?''சாலா: '' அவர் இப்போது வேலை எதுவும் செய்ய  வில்லை.''பெரும்பாலும் யாருடைய சொந்த விஷயங்களையும் கேட்காமல் இருப்பது என் கொள்கை.
எல்லோருக்கும்  அவரவர் அந்தரங்கம் சொந்த விஷயம். அதில் தலையிடக்கூடாது என்பது நானே எனக்கு விதித்துக்கொண்ட ஒரு கோட்பாடு.
என்னுடைய அந்த விதி முறையை நானே மீருவதுபோல், அதன் விளைவுகளை நினைக்காது அடுத்தக் கேள்வியைக் கேட்டேன்.சில சமயங்களில் மனதைத் தொடும் நெகிழ்வில் நாம் நம்மை மீறி செயல் படுகிறோம். நானும் அதற்கு விலக்கல்ல.
நான்: '' உன் தந்தை retire ஆகி விட்டாரா?''சாலா: '' அவர் ஓய்வு பெற்று பல வருஷங்கள் ஆகி விட்டது. நன்றாக வாழ்ந்தார். இப்போது 'அண்டர் கிரௌண்டில்' இருக்கிறார்.
நான்: '' underground  என்றால்?... புரிய வில்லை.... ஏதாவது தலை மறைவான அரசியல் புரட்சி போல? ....மறைந்திருந்து .....''சாலா: '' அதெல்லாம் இல்லை.நான் சிறுவயதாக இருக்கும் போதே அவர் இறந்து விட்டார்.''

நான் வாயடைத்துப் போனேன்.
மேலே எப்படித் தொடர்வது என்று தயங்கினேன்...
சில சமயம் பேசாமல் இருப்பதே சரி.
சாலாவே நிலைமையை புரிந்து தொடர்ந்தான்...
''
நான் எப்படி என் அப்பாவை கலந்து ஆலோசிப்பேன் என்று நீ நினைப்பது புரிகிறது.
என் தந்தை எப்போதும் என் மனதில் இடம் பெற்றவர். ஏதாவது கேட்க வேண்டுமானால் நான் என் மனதுக்குள் நிறுத்தி, அப்படியே விட்டு விடுவேன்.அவருடைய பதில்  உரிய நேரத்தில் கிடைத்து விடும்.''நான்: '' அது எப்படி உனக்குத் தெரியவரும்? பதில் வந்தது என்று என்று எப்படி புரியும்?''சாலா: ''பழக்கத்தினால் அது புரியும்.சிறு வயதிலிருந்தே அது எனக்கு பழக்கமாகிவிட்டது.''
இன்னமும் எனக்கு அவனுடைய உத்தி மிக சாமர்த்தியமானதாகப் பட்டது.
நட்பை இழக்காமல் சங்கடமான சமயத்தில் சமயோசிதமாய் பதிலளிப்பது சாமர்த்தியம் தானே.
கடவுள் நம் எல்லோருக்கும் அந்த சாமர்த்தியத்தைக் கொடுத்திருந்தும் அதை உபயோகிக்கத் தெரிந்திருக்கவும் சாமர்த்தியம் தேவையாயிருக்கிறது.


மெடிக்கல் ரெப்


மெடிக்கல் ரெப்
 
எனக்கு இன்னொரு நிகழ்ச்சி நியாபகம் வருகிறது. 
ஒரு நண்பர் '' நீங்கள் ஏன் சார் இப்படி யோகா வெல்லாம் சொல்லிக்கொடுத்து கஷ்டப் படறீங்க?நம்ம மக்களுக்கு எல்லாம் உடம்பு வணங்காமல் எளிதாய் வேண்டி இருக்கிறது.
நீங்கள் ஏன் medical representative ஆகக் கூடாது? அது நல்ல லைன்.
வருவாயும் அதிகம் கிடைக்கும்.
பல இடங்களுக்கு செல்ல வாய்ப்பும் உண்டு.'' என்றார்.
''
இல்லீங்க அதெல்லாம் சரிபடாது.
பல மருந்துகளின் பேர் எல்லாம் வாயிலே நுழையாது. வேண்டாம்.'' என்றேன்.
''
அதனால் என்ன, போகப் போக வந்துவிடும்.
உங்களுக்கு தகுதி இருக்குங்க, அதனால் தான் சொல்றேன்.''

என் தகுதியைப்பற்றி அவருக்கு எப்படித் தெரியும்?
''
எப்படி சொல்றீங்க?''
''
ஒரு medical rep க்கு தகுதி இருக்கணும்னா மூணு விஷயம் தேவை.
ஒண்ணு: கையிலே பை (brief case)இரண்டு: கழுத்திலே டை (tie)மூணாவது: வாயிலே பொய் (lie)உங்களுக்கு இரண்டு விஷயம் already இருக்கு .
மூணாவது மட்டும் சேர்த்தால் போதும்.
medical rep
ஆகி விடலாம்.'' என்றார்.

''
எனக்கு என் மனைவியிடமே பொய் பேச வராது ...
இதெல்லாம் சரிபடாது விடுங்க '' என்றேன், அப்பாவியாக.
''
அதைச் சொல்லலீங்க, உங்ககிட்டே கைப்பை இருக்கு...
பொய் சரளமாய் வரது... 
ஒரு tie மாத்திரம் நல்லதாய் பளிச்சுன்னு வாங்கிட்டா போதும்.'' என்றார் சிரிப்புக்கிடையே
கொஞ்சம் நல்ல டையா பளிச்சுன்னு இருக்கும்படி தேடிட்டிருக்கேன் அப்போலேருந்து...
இதை அவர் என்னிடம் சொன்ன போது எனக்குப் பக்கத்தில் தமிழ் தெரியாத இன்னொரு நண்பர் இருந்தார்.
''what is the joke? …translate in English, so I can enjoy it too''  
என்றார்.
அவர் டை கட்டி இருந்தார், …..சொல்ல  பயமாய் இருந்தது....
medical rep  
ஆக இருந்தால்?இந்த ஜோக் தமிழில் தான் எடுபடும்.
இதை ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்க்கமுடியும்?
punch line
போய் விடும்.
அதே போல் சில ஆங்கில ஜோக்ஸ் தமிழில் எடுபடாது.
''this is a non-transferable joke''  
என்று சொல்லி சமாளித்தேன்....
non-translatable
என்றால் கொஞ்சம் கரடு முரடாய் இருக்கிறதே என்று

Sunday, January 30, 2011

மூளை இழப்பு


மூளை இழப்பு

[ BRAIN DRAIN ]

நகைச்சுவைச் சங்கம்
திருவல்லிக்கேணி கிளை
ஹிந்து உயர்நிலைப்பள்ளியில் ஒரு வகுப்பறை....
ஜனவரி 1985கடைசி பென்ச்சில் நான்...(habits die hard)...பழைய ஸ்கூல் பழக்கம்!
குணா தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் ஜோக் சொல்ல வந்தவர்களை அறிமுகம் செய்து நடு நடுவே சிரிப்பு வெடிகளையும் பொருத்தமாய் உதிர்த்துக்கொண்டிருந்தார்.
தலைவர் சீதாராமன் ஒரு புன்னகையுடன் இதை எப்படி classify பண்ணலாம் என்ற யோசனையோடு அமர்ந்திருந்தார்.
ஒரு இளம் மாணவி மேடை ஏறி ஜோக் வெடித்தார்...
''
என் பேர் கல்பனா,நாலு நாளாய் நான் தூங்கவே இல்லை''

பரவாயில்லையே நாலு நாள் தூங்காமல் ஜோக்ஸ் தயார் செய்து கொண்டு வருகிறார்களே , நமது நகைச்சுவை சங்கத்துக்கு நல்ல எதிர்காலம் தான்...என்று நான் நினைத்துக்கொண்டேன்..

அந்த மாணவி தொடர்ந்தார்...
''
எங்க biology டீச்சர் மூளையை பற்றி பாடம் எடுக்கும்போது சொன்னாங்க
....
நம்ம எல்லோருடைய மூளையும் தினமும் ஆயிரக்கணக்கான செல்களை இழந்துகொண்டே இருக்கின்றன...
our brain cells die everyday in thousands...
so try to use whatever you are left with, more wisely every
moment
...அப்படின்னு சொன்னாங்க ...
அதிலிருந்து எனக்கு ஒரே கிலி யாகி விட்டது...
நாலு நாளாய் சரியாகத்தூங்கவில்லை.
ஒரே குழப்பம் ....
தினமும் ஆயிரக்கணக்கில் மூளையின் செல்கள் குறைந்தால் கொஞ்சநாளில் மூளையே இருக்காதே……
அப்போது எப்படி homework செய்வது?''இப்படி கேள்வியில் சிரிப்பு வெடியை வைத்து முடித்தார் அந்த மாணவி.
பலத்த கைத்தட்டல் ...
யாருக்கும் கவலை வந்ததாகத் தெரியவில்லை...
குணாவைத் தவிர...
தன் சிரிப்பை லாவகமாக அடக்கிக்கொண்டு குணா சொன்னார்:
''
இந்த நகைச்சுவை மேடைக்கு மூளை அணுத்துளிகளை முதல் முறையாக அரங்கேற்றிய செல்வி கல்பனாவுக்கு நன்றி,உங்களுக்கு வந்த இந்தக் கவலை எங்களுக்கு இல்லை, ஏனென்றால் கவலைப்படவும் brain cells வேண்டும். எங்களுக்கு கொஞ்சம் குறைவுதான்....''மறுபடி சிரிப்பு ...
குணா தொடர்ந்தார்...
''
இன்று நம்மிடையே அதிர்ஷ்ட வசமாக ஒரு யோகா நிபுணர்
வந்திருக்கிறார்...இந்த மாணவியின் கவலையைப் போக்க யோகா முறையில் சில வழிகளை சொல்ல டாக்டர் ராமன் அவர்களை மேடைக்கு அழைக்கிறேன்''இதைக் கேட்டதும் எனக்கு வெலவெலத்துவிட்டது.
ஏதோ ஜோக்ஸ் கேட்டு சிரிக்கலாம் என்று வந்தால் குணா இப்படி மாட்டிவிட்டாரே,
 
அதுவும் மூளைக்கும் எனக்கும் முடிச்சுப்போட்டால் என்ன ஞாயம்?
''
ஐயா, இந்த நகைச்சுவை மன்றத்தில் நான் யோகாவைப்பற்றி சொல்வது எடுபடாது
வேண்டாம் '' என்றேன்.
குணா என்னை எளிதில் விடுவதாக இல்லை....
''
சில வார்த்தைகள்'' என்றார்.
நான் மெதுவே என்னுடைய 'ஆகிவந்த' கடைசி பெஞ்சில் இருந்து மேடையை நோக்கி நடந்தேன் இதை எப்படி சமாளிக்கலாம் என்று மனதுக்குள்ளே 'SMS' கொடுத்தபடி,சொல்லப்போனால் செல்போன் இல்லாமலே அப்போதே 'SMS' முறையை கண்டுபிடித்ததற்கு என்னை இன்னும் யாரும் கௌரவிக்கவே யில்லை...
மனம் பதில் SMS கொடுத்தது...வெகு விரைவாக.
''
நகைச்சிவை நண்பர்களே'' என்று ஆரம்பித்தேன்,
''
நான் இங்கே வந்தது கொஞ்சம் சிரிக்கலாம் என்று.
குணா என்னை இப்படி மாட்டிவிடுவார் என்று கொஞ்சமும் நினைக்கவேயில்லை.
மூளையைப்பற்றி நான் எப்படி?....இருப்பதைப்பற்றி பேசச்சொன்னால் ஏதோ சமாளிக்கலாம்.
இல்லாததைப்பற்றி பேச அரசியல் வாதிகளால் தான் முடியும்''குணா நடுவே புகுந்தார்...
''
இருப்பதை பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம்.
இல்லாததைப் பற்றி experts  நிபுணர்கள் தான் பேச முடியும்.
அதனால் தான் உங்களை அழைத்தோம்'' என்றார்....
மறுபடி சிரிப்பு.
நான் தொடர்ந்தேன்:
''
மூளை அணுக்கள் குறைந்து வருவது உண்மைதான் ...
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் செல்கள் நம்மைவிட்டுப் போய்க்கொண்டே இருக்கின்றன ... இதோ இங்கே பேசிக்கொண்டே இருக்கும்போதே  பல செல்கள் விடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அதை வேறு கோணத்தில் இருந்து பார்க்க வேண்டும். அப்போது தான் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.
நம் உடல் சுமார் 75 trillion  செல்களால் ஆனது.
[ 75 trillion cells make up an average human body]
 
சிலருக்கு கொஞ்சம் அதிகமாய் இருக்கும்.... சுமோ குத்துச்சண்டை வீரர்களைப் பார்த்திருப்பீர்கள்...அவர்களுக்கு நம்மை விட பல மடங்கு இருக்கும்...
சிலருக்கு குறைவாக இருக்கும்... சார்லி சாப்ளின் போன்ற குச்சி மனிதர்களுக்கு....
இந்த 75 trillion  என்பது 7500 கோடி ...
இதில் 14 billion செல்கள் ... சுமார் ஒன்றரை கோடி அணுக்கள் நம் கண்களில் உள்ளன...
நமது மூளை சுமார் ஐம்பது அல்லது அறுபது கோடி செல்களால் ஆனது.
ஐம்பது கோடி என்பது பெரிய விஷயம்.
இதிலே நாம் சாதாரணமாக 5%  க்கும் குறைவாகவே உபயோகிக்கிறோம்.
உலகில் மிக சிறந்த விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன் போன்றவர்கள் கூட 8 அல்லது 9 %தான் உபயோகிக்கிறார்கள்.
மீதி மூளையை உபாயோகிக்காமலே நாம் இவ்வளவு அறிவுள்ள ஜீவன்கள் போல மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம்!
ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் செல்கள் இறந்து மறைந்தால் 60..70 வருஷங்களில் …..
சுமார் நாலு கோடி முதல் ஐந்து கோடி வரை நம் மூளையில் துண்டு விழும்....
ஐம்பது கோடியில் ஐந்து கோடி...எழுபது வருஷங்களில் ....
மூளை இன்னும் பாக்கி 90%  அப்படியே  இருக்கிறது என்பது ரொம்ப மகிழ்ச்சி யான விஷயம்...
நம்மை யாரும் அசைக்க முடியாது.
என் மூளையை...இல்லாத பகுதியை கொஞ்சம் சிந்த உதவிய குணாவுக்கும் செல்வி கல்பனாவுக்கும் நன்றி.''என்று மேடையில் இருந்து இறங்கினேன்... என்னுடைய அபிமான 'வாஸ்து படி ' ஆகி வந்த கடைசி பெஞ்சை நோக்கி...
அன்றைய நிகழ்ச்சி முடிந்ததும் அந்த மாணவியை கை கொடுத்து பாராட்டினேன், பஞ்ச் லைனில் கேள்வி வைத்து அருமையாய் முடித்த நேர்த்திக்காக.
மனம் ஒருமைப்படவும் நினைவாற்றலை பெருக்கிக்கொள்ளவும் யோகப்பயிற்சிகள் உண்டா என்று கேட்டார் அந்த மாணவி.
நிச்சயம் உண்டு என்றேன்.
எனக்குக் கற்றுக்கொடுக்க முடியுமா? என்று கேட்டார்.
நகைச்சுவை சங்க உறுப்பினர்களுக்காக ஒரு course –(workshop)- யோகப் பட்டறை ஆறு நாள் நடத்தியது அந்த மாணவிக் காகத்தான்.
''
பிராணாயாமம்'' என்னும் மூச்சுப்பயிற்சி நுட்பங்கள் நம் யோகக்கலை  பொக்கிஷங்கள்.
''
ஆழ்நிலை த்யானம்'' ராஜ யோகத்தின் ஒரு மகத்தான அன்பளிப்பு நம் அனைவருக்கும்.
ஒரு patent அல்லது copyright போர்வைக்குள் அவற்றை முடக்காமல்
எல்லோருக்கும் அன்போடு அளித்த நம் ரிஷிகளும் சித்தர்களும் பெரும்பாலும் தம் பெயரைக்கூட ப்ரசித்தப்  படுத்தாமல் பகிர்ந்துகொண்டது ரொம்பவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.
பிராணாயாம மூச்சுப்பயிற்சிகளும், ஆழ்நிலை த்யானமும் தினமும் காலையும் மாலையும் அனுசரிப்பவர்களுக்கு மனம் ஒருநிலைப்படும். மனச்சஞ்சலங்கள் இறுக்கங்கள் விலகும்.
மாணவர்களின் நினைவாற்றல் பல மடங்கு பெருகும்.... ஒழுங்குபடும்.
இருப்பதை மேலும் நன்றாக உபயோகிக்கவும் சாதனமான இந்தப் பயிற்சிகள் கற்பதற்கு மிக எளியவை.
அதனாலேயே மக்கள் இவற்றை உதாசீனத்துடன் விட்டுவிட்டு மருத்துவர்களுக்கும், மாந்த்ரிகர்களுக்கும், ஜோசியர்களுக்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்று தணியும் இந்த மடமை?இதை இன்னும் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் இதில் சேர்த்தி இல்லை...
நீங்கள் யோகப் பயிற்சி செய்பவர்களானால்....அல்லது உடனே யோகப்பயிற்சி மேற்கொள்வீர்களே யானால்……
ராஜ யோகம், க்ரியா யோகம், வேதாத்திரி மகரிஷியின் 'SKY', மகரிஷி மகேஷ் யோகியின் TM , ஜக்கி வாசுதேவின் இஷா யோகா, ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரின் சுதர்ஷன் க்ரியா, புத்தர் அருளிய விபாசனா, சத்குரு பாபாஜியின் க்ரியா முறைகள் எல்லாம் அருமையானவை. எதிலேயும் ஆரம்பிக்கலாம் ....
எது நல்லது என்ற யோசனையில் காலத்தை ஓட்ட வேண்டாம்.