Wednesday, October 21, 2009

தக்காளி சூப்

-->
 தக்காளி சூப்




''உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லணும்...
என் சொந்த அனுபவம்.

சில நாட்களுக்கு முன் ஒரு உணவகத்துக்குப் போயிருந்தேன்...
மெனு அட்டையே ஒரு புத்தகம் போல பளபளப்பாய் பிளாஸ்டிக் உறையுடன் ஜொலித்தது.
ஐட்டங்களை பார்த்துக்கொண்டே வரும்போது ''Tomato soup - Rs 30'' என்று போட்டிருந்தது.
சரி அதையே முதலில் ஆர்டர் பண்ணலாம் என்று நினைத்தேன்.
ஆனால் அதற்கு அடுத்ததாக மறுபடி ''Tomato soup (special) - Rs 60''  என்று போட்டிருந்தது.
 
இந்த இரண்டில் எதை ஆர்டர் பண்ணுவது?
waiter
யே  கேட்டேன்:
'' Tomato soup - Rs 30,  Tomato soup (special) - Rs 60'...
என்று அதையே
டபிள் விலையில் போட்டிருக்கீங்களே ...
இந்த அறுபது ரூபாய் தக்காளி சூப் என்ன வெளிநாட்டுத் தக்காளியில் செய்ததா?''
waiter
சொன்னார் :
''
ரெண்டும் ஒன்று தான் சார்.
கஸ்டமர்ஸ் தேவைக்கேற்றபடி கொடுப்பது எங்கள் பாலிசி'' என்று அங்கே மாட்டியிருந்த 'MISSION STATEMENT' பலகையை காட்டினார், கொஞ்சம் கூட சிரிக்காமல் சீரியசாக.
எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை...
''
அப்படின்னா எனக்கு புரியவில்லையே
கஸ்டமர்ஸ் தேவைக்கேற்றபடி என்றால்?
எல்லோரும் விலைமலிவாய் தரம் உயர்வாகத்தானே


எதிர்பார்ப்பார்கள் ?''
''
எல்லோரும் அப்படி இல்லை சார்.
சிலருக்கு விலை குறைவாய் இருந்தால் தரமும் குறைவாய் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை.
அறுபது ரூபாய் சூப் UMC கஸ்டமர்ஸ் கேட்பாங்க.
முப்பது ரூபாய் சூப்  LMC கஸ்டமர்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க.
இது நாங்க தினசரி பார்க்கிறதுதாங்க'' என்றார்.
''
அதென்ன UMC ... LMC...?
 
எனக்கு QMC தான் தெரியும்...QUEEN MARY'S COLLEGE ...
இதென்னப்பா புதுசா குழப்பறீங்களே...''
''
அதாங்க அப்பர் மிடில் கிளாஸ் (upper middle class)
அறுபது ரூபாய் சூப் கேட்டால் அவங்க UMC என்று புரிந்துகொள்வோம்.
முப்பது ரூபாய் சூப் ஆர்டர் பண்ணினால் அவங்க LMC  என்று தெரிந்துவிடும்''.
இது எனக்கு ரொம்ப அதிர்ச்சியான classification ஆக பட்டது.
மக்களை இப்படியெல்லாம் கொடுமையாக பிரிக்கிறாங்களே..
சாதிக்கொடுமைகள் போறாதா?
இது வேறே புதுப்பிரிவா?...
'indian made foreign liquor'
மாதிரி இருக்கே ...
நான் கேட்டேன் :
''
நான் UMC யும் இல்லை LMC யும் இல்லை ....
எப்படி ஆர்டர் பண்றது? '
''
அது ஒண்ணும் கஷ்டம் இல்லை சார்,
இரண்டையும் கலந்துட்டாப் போறது ...
அது 45 ரூபாய் தான்.''
அதிலிருந்து சூப் ஆர்டர் செய்வதையே விட்டு விட்டேன்.''


No comments:

Post a Comment