Thursday, September 1, 2011

லிப்டில் ஒரு அதிர்ச்சி


லிப்டில் ஒரு அதிர்ச்சி

சில  நேரங்களில் அவசிய மற்ற வார்த்தைகளை அள்ளி வழங்குகிறார்கள்  சிலபேர்மற்றவர்களை அது எப்படி பாதிக்கும் என்று சிறிதும் சிந்திக்காமல்.
ஒருமுறை எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் லிப்ட்க்காக  காத்திருக்கும்போது ஒருவர் வந்தார்.
அவர்: '' ஹலோ, நீங்கள் புதியதாய் இங்கே வந்திருக்கிறீர்கள் இல்லையா?''
நான்: ''ஆமாம்''
அவர் : ''நீங்கள் ஜாம்பியாவில் வேலை செய்துவிட்டு இப்போது இங்கே வந்து செட்டில் ஆகி இருக்கிறீர்கள் என்பது உண்மையா?''
நான் : '' ஆமாம்''
என்னைப்பற்றி இவ்வளவு விரைவில் இவ்வளவு தெரிந்து கொண்டிருக்கிறார் …. இவர் யாராக இருக்கும்?
அதற்குள் லிப்ட் வர இருவரும் ஏறிக் கொண்டோம்.
அவர் கேள்விக் கணைகளைத் தொடர்ந்தார்.
''
எவ்வளவு வருடம் ஜாம்பியாவில் இருந்தீர்கள்?''
நான்: ''ஐந்து வருடம்''
அவர் : ''ஓஹோ, பரவாயில்லை.
எனக்குத் தெரிந்த  நண்பர் ஒருவர் ஜாம்பியாவில் டாக்டராக இருந்தார்.
நான்: ''அப்படியா?''
அவர் : '' ஆமாம். ஆனால் ஒரு வருஷத்தில் அங்கேயே காலமாகி விட்டார்.''
நான்: '' அடப்பாவமே''
இதற்குமேல் இந்த அதிர்ச்சிகரமான தாக்குதலை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.... எனினும் சொன்னேன்ன் :
''
சில நேரங்களில் டாக்டர்களும் இறந்துபோக நேரிடுகிறது...
இதுபோல் நடப்பது நமக்கு அப்பாற்பட்டது, என்ன செய்வது'' என்றேன்
அதற்குள் லிப்ட் இறங்கிவிட எங்கள் இனிய உரையாடல் முடிவடைந்தது.
நான் ஏதோ ஞானி என்பது போல என்னைப் பார்த்துவிட்டு மறைந்தார் அந்த நண்பர்.
இன்னும் கதை முடியவில்லை .....

இந்த மறக்கமுடியாத உரையாடலைப் பற்றி எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் சகவாசியாய் இருக்கும் இன்னொரு நண்பரிடம் கூறியபோது அவர் சொன்னது எனக்குவியப்பளித்தது.
''
, அவர் ஒல்லியா, உயரமா, வழுக்கையா, சார்லி சாப்ளின் மாதிரி ஒட்டு மீசையுடன் இருந்தாரா?''
நான்: '' ஆமாம், எப்படி இவ்வளவு சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?''
அவர்: '' அவர்  ஒரு லாயர், ...வழக்கறிஞர்.... இப்போதெல்லாம் வழக்குரைஞர் என்று சொல்லவேண்டும். அவர் எப்பவும் இப்படித்தான்.''
எனக்கு ஆச்சரியம்.
நான்: '' எப்பவும் என்றால்?''
அவர்: ''அதாவது ... யாரைப்  பார்த்தாலும் ஏதாவது பேச ஆரம்பிப்பார் .
எனக்கும் ஒருமுறை இதுபோல் நடந்தது.
சமீபத்தில் ஒரு நாள் என்னைப் பார்த்தபோது அவர் 'ஹலோ' சொல்லிவிட்டுக் கேட்டார்:'நீங்கள் என்ன செய்கிறீர்கள்?'
நான் சொன்னேன்: 'நான் மரின் என்ஜினீயர், கப்பல் பராமரிக்கும் வேலை''
அவர் பதிலளித்தார்:' , பரவாயில்லையே,
எனக்கு ஒரு மரின் என்ஜினீயரைத்  தெரியும்
அவர் மெக்சிகோ கப்பலில் வேலை செய்தார்'
நான்: 'அப்படியா?'
அவர்:'ஆமாம் ... ஆனால் அந்தக் கப்பலிலேயே இறந்து விட்டார், போன வருஷம்'
எனக்கு வியப்பாகிவிட்டது.
என்னடா, இந்த மனுஷன் இப்படி இங்கிதம் இல்லாமல் பேசுகிறாரே என்று. இந்த வருஷம் தான் நான் படிப்பு முடிந்து கப்பலில் பணிபுரியச் செல்கிறேன். இது என்ன அபசகுனம் மாதிரி.''
என்று சொல்லி முடித்தார் அந்த சகவாசி.
இப்போது எனக்கு அந்த வழக்குரைஞர் நண்பரைப் பற்றி கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.
எங்கள் அபார்ட்மென்டில் உயரமாக, ஒல்லியாக, வழுக்கையாக, ஒட்டு மீசையுடன் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அதிர்ந்துவிடாதீர்கள். அவர் இறந்தவர்களைப்பற்றிய ஸ்பெஷலிஸ்ட்.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான சுவாரசியங்கள்.
கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும்!


தாடி


தாடி

சில பேர் தியானம் (meditation) கத்துக்கணும்னு யாராவது தாடியோட இருக்கறவங்க பின்னாலேயே போவாங்க.
நமக்கெல்லாம் தாடி மேலே ஒரு மரியாதை.
தாடி வெச்சவர்கள் எல்லாம் சாமியார்கள் என்று நம்புகிற வெகுளித்தனம்.
அரபு நாடுகளில் தாடி வெச்சவங்களை கொஞ்சம் உஷாராக கவனிக்கறாங்க.
எந்த தாடியில் எந்த பாம்பு (bomb)  இருக்குமோ என்ற நிலை....
ஒருவர் அப்படித்தான் ஒரு போலிச் சாமியாரிடம் ஏமாந்ததில் தாடியைக் கண்டாலே பிடிக்காது. ஆனால் தமிழ் சினிமா மோகம்.
''
நான் கடவுள்'' திரைப்படம் பார்த்தே ஆக வேண்டும் .... தாடியோடு நாயகன் இருந்தாலும் பரவாயில்லை என்று படம் பார்க்கப் போனார்.
அவருக்குக் கூட்டத்தில் படம் பார்க்கப் பிடிக்காது.
கடைசி வாரம் படம் திரையிலிருந்து விலகுமுன் பார்ப்பது அவர் வழக்கம்.
காலி இடங்களுக்கு நடுவே காலைத்தூக்கிப் போட்டுக்கொண்டு நிம்மதியாய்ப் பார்ப்பார்.
அதில் ஒரு சந்தோஷம்.
’’
நான் கடவுள்’’ திரைப்படம் பார்க்கப்போனபோது அப்படித்தான் காலி வரிசையில் கடைசியில் அமர்ந்தார்....
ஆனால் அவர் மகிழ்ச்சி சில நிமிஷங்களில் மறைந்தது.
ஒரு தாடிக்காரர் அவர் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.
''
இவ்வளோ இடம் காலி ....என் பக்கத்தில் இடித்துக்கொண்டு ஏன் இப்படி உட்காரணும்?''
இந்த தாடிக்காரனை எப்படியாவது நகர்த்தணும் என்று நினைத்தார்.
தான் வேறு இடத்துக்கு போகலாமே என்று தோன்ற வில்லை.
முதலில் வந்தவனுக்கு உரிமை?
அவர் சொன்னார், பக்கத்தில் இருந்த தாடிக்காரரிடம் :
''
நானும் உங்களை மாதிரி அசிங்கமா தாடி வெச்சிருந்தேங்க.....
ஒரு நாள் கண்ணாடியில் பார்த்ததும் இவ்வளவு அசிங்கமாய் இருக்கே இந்த தாடி ....
அதனால்தான் நம்மளை யாரும் கல்யாணம் செய்துக்க மாட்டேங்கறாங்க என்று புரிந்தது.
உடனே சலூனுக்குப் போய் தாடியை அடியோடு எடுத்து விட்டேன்.''
அதற்கு பக்கத்தில் இருந்த தாடிக்காரர்:
''
அய்யா, நானும் ஒரு நாள் கண்ணாடியில் என் முகத்தை பார்த்தபோது
திடுக்கிட்டேன்,....
உங்களை மாதிரியே அசிங்கமாய் இருந்தது என் முகம்.
அதை மறைக்கத்தான் தாடி வளர்க்க ஆரம்பித்தேன்.'' என்றார்.
''
அப்படியா, அப்போ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?''
''
இல்லீங்க...... உங்களுக்கு?''
''
எனக்கும் இன்னும் ஆகலீங்க.''
இந்த common ground  அவர்களுக்குள் ஒரு நட்பை ஏற்படுத்தி விட்டது.
இப்போதெல்லாம் பல படங்களை அவர்கள் சேர்ந்தே பார்கிறார்கள்.
தாடியால் இப்படி ஒரு நட்பு.